ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Thursday, January 27, 2011

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா



குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய்
கண்ணா கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும்
எனக்கு குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா,
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா ,
உன்னை மறை
ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா


குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா


கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலி நாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


யாதும்
மறைக்காத மலையப்பா
யாதும் மறைக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடல் அன்னை என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு என்றும் இருந்திட
ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலைப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா!
கோவிந்தா கோவிந்தா !!
கோவிந்தா கோவிந்தா!!! கோவிந்தா கோவிந்தா !!!

No comments:

Post a Comment